நான் செஞ்ச தப்பால ஷங்கர் சாரிடம் திட்டு வாங்கினார்!! அந்தமாதிரி முட்டாள்!! நடிகர் ஸ்ரீகாந்த்..
சினிமாவில் வெற்றி தோல்விகள் என்பது சகஜமான ஒன்றாகி அது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் அமையும், சிலருக்கு தோல்வியாகவும் அமையும். அப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன என்று பகிர்ந்துள்ளார். ரோஜா கூட்டம் படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் சம்பளம் 1 லட்சம் கொடுக்கப்பட்டது.
அதன்பின் ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடிக்க 25 லட்சம் சம்பளமாக வழங்கினார்கள். ஆனால் அப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் எனக்கு பிடிக்காததால் சிம்புவை வைத்து சைட் அடிப்போம் தம் அடிப்போம் என்ற பாடலை உருவாக்க போராடினேன்.
படத்தின் தயாரிபபாளர் இதற்கு மேலும் செலவு செய்ய முடியாது என்று கூறியதால் என் சம்பளத்தில் இருந்து 4 லட்சம் பாடலுக்காக கொடுத்தேன் என்றும் அப்படி பல படங்கள் சரியாக வரவேண்டும் என்று நினைத்து நிறைய பணத்தை இழந்தேன் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
மேலும் நண்பன் படத்தினை 6 மாதத்தில் ஷங்கர் சார் எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் படம் 8 மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு முழு காரணம் நான் தான். கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுவது தெரியாமல் உதவி இயக்குனர் பேச்சை கேட்டு காலேஜ் போர்ஷன் என நினைத்து தாடி மீசை எல்லாம் ஷேவ் செய்து ஷூட்டிங்கிற்கு போனேன்.
என்னை பார்த்த ஷங்கர் சார் ஷாக்காகி, எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் நீங்க, கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி வந்து நிக்கிறீங்களே?. ஷேவ் செய்யவேண்டும் என்றால் இங்கே வந்திருக்கலாமே என்று திட்டினார். அப்படி நான் செய்ததால் மீசை வளர்வதற்காக அனைவரின் கால்ஷீட்டையும் வீணடித்து ஒன்றரை மாதம் கழித்து அந்த காட்சியை முடித்தோம் என்று கூறியிருக்கிறார்.