இறக்கும் நேரத்தில் மக்களுக்காக யோசித்து பிரபல நடிகை ஸ்ரீவித்யா செய்த செயல்

Srividya
By Yathrika Jun 05, 2024 06:00 AM GMT
Report

ஸ்ரீவித்யா

அழகு, நல்ல சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்த நாயகிகள் பலர் ஏனோ நீண்டநாள் உயிருடன் இருப்பது இல்லை. உதாரணத்திற்கு ஒருவரை கூற வேண்டும் என்றால் சில்க் ஸ்மிதாவை கூறலாம்.

அவரைப் போலவே  அழகில் வசியம் செய்து, நடிப்பினால் மக்களை மயக்க வைத்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார தட்டுப்பாட்டால் 14 வயதிலேயே நடிக்க வந்தவர் பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். நடிகர் கமல்ஹாசனும் இவரும் காதலித்து வந்துள்ளனர், ஆனால் தனது அம்மா சம்மதிக்காததால் ஸ்ரீவித்யா வேறொரு மலையாள இயக்குனரை திருமணம் செய்தார். 

சில வருடங்களிலேயே அவருடன் பிரச்சனை ஏற்பட விவாகரத்து பெற்றார். பின் மீண்டும் நடிக்க தொடங்கியவருக்கு உடல் கைகொடுக்கவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அதனால் 3 வருடங்கள் கஷ்டப்பட்டார். 

பின் இறக்கும் நேரத்தில் தனது சொத்து அனைத்தையும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் எழுதி வைத்துள்ளார்.

இறக்கும் நேரத்தில் மக்களுக்காக யோசித்து பிரபல நடிகை ஸ்ரீவித்யா செய்த செயல் | Srividya Donated Whole Property To Poor Student