எனக்கு போன் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டாரு.. வைரமுத்துவின் லீலைகள் பற்றி ஒப்பனாக பேசிய பாடகி..
ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் தற்போது மலையாள சினிமாவைத்தாண்டி இந்திய சினிமாத்துறையில் நடுங்கியுள்ளது. பலர் ஹேமா கமிட்டி தொடர்பாக இணையத்தில் பேசி வரும் நிலையில் பாடகி சுசித்ரா, வைரமுத்து தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் எல்லா பாடகிகளுக்கும் கால் செய்து இப்படித்தான் பேசுவார், டயலாக் உட்பட. உங்கள் வாய்ஸில் ஒரு காமம் இருக்கும், உங்கள் வாய்ஸ் மீது காதல் ஏற்படுது என்று சொல்லுவார். மே மாதம் தொண்ணுத்தெட்டு பாடலை நான் பாடியபோது, உங்கள் வாய்ஸில் ஒரு காதல் இருக்குன்னு சொன்னாரு.
கேவலமான பாட்டு அது. அதை கேட்டு எவனுக்கு காதல் வரும், ரீமா சென் மீதுகூட வரலாம். பயந்து பயந்து பாடினேன் அந்த பாட்டை. அவர் அப்படி போன் பண்ணி வீட்டுக்கு வாம்மா உனக்கு பரிசு கொடுக்கனும் என்று சொன்னார்.
நான் என் பாட்டியை கூட்டிச்சென்று, பரிசு கொடுக்கனும் என்று சொன்னீங்களே கொடுங்கள் என்று என் பாட்டி வைரமுத்துவிடம் கேட்டார். அவருக்கு பதறிவிட்டது. பரிசு கொடுக்க எல்லாம் என்னை கூப்பிடவில்லை தொடுவதற்குத்தான் என்னை கூப்பிட்டார்.
ஒரு ஷேம்பு பாட்டில் கொடுத்தார். அப்படி அவர் வரியில் பாடவேண்டும் என்று வைரமுத்து கால் பண்ணால் கட் செய்துவிட்டு அவர்களை பைத்தியமாக்கிவிடுவேன் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.