பொன்னியின் செல்வன் தெலுங்கு, ஆந்திரா படம் தான்.. சர்ச்சையை கிளப்பிய மணிரத்னம் மனைவி..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன்.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா,பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் மிகுந்த வரவேற்பு எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று பிரஸ்மீட், ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள் படக்குழு. அந்தவகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிரத்னம் மனைவி நடிகை ஹாசினியும் கலந்து கொண்டு பேசினார்.
அதில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உட்பல பல இடங்களில் தான் ஷூட்டிங் நடைபெற்றது. தமிழ்நாட்டில், பாண்டிச்சேரி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்றது. அதனால் பொன்னியின் செல்வன் படம் உங்களுடைய படம். இப்படி சுஹாசினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது என்னடா Tamil Pride க்கு வந்த சோதனை ?? #PonniyinSelvan1pic.twitter.com/hXBxHbDXA9
— Tʀᴏʟʟ VIP (@Trollvipoffl) September 26, 2022