விவாகரத்துக்கு பின் அரசியல்வாதியுடன் ரகசிய உறவு!! மெளனம் கலைந்து வாய்ந்திறந்து பேசிய நடிகை சுகன்யா..
90-களில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. சுகன்யா விவாகரத்திற்கு பின்னர் பிரபல அரசியல் வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகை சுகன்யா, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சுகன்யா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 -ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுகன்யா விவாகரத்துக்கு பின் ஒரு அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பலவிதமாக பரவி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை சுகன்யா.
வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது என் அக்காவின் மகள் என் மகள் இல்லை என்றும் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து ஒரு வருடத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் அப்ளை செய்தேன். ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் தான் விவாகரத்து கிடைத்தது. வேண்டும் என்றே செய்திகளை பரப்ப வேண்டும் என்ற காரணத்தால் இப்படி சிலர் செய்கிறார்கள் என்று உருக்கத்துடன் சுகன்யா தெரிவித்துள்ளார்.
You May Like This Video