இப்படிப்பட்ட நடிகையை பார்த்ததில்லை.. சுந்தர் சி-யை டார்ச்சர் செய்த நடிகை சம்யுக்தா..
தமிழ் சினிமாவில் 1995ல் முறை மாமன், முறை மாப்பிள்ளை என்ற இரு படங்களை ஒரே வருடத்தில் இயக்கி வெளியிட்ட இயக்குன சுந்தர் சி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம். உன்னைத்தேடி, வின்னர், அரண்மனை1, 2, 3, போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார் சுந்தர் சி.
இதனை தொடர்ந்து ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் 6 நடிகைகளை வைத்து Coffee With காதல் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று சகோதரர்கள் கதாநாயகிகளுடன் காதல் செய்வதை வைத்து காமெடி கலந்து எடுத்துள்ளார் சுந்தர் சி.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி-யிடன் தொகுப்பாளினி விஜே ஆர்ச்சனா, படத்தின் நடிகைகளை பற்றி நல்லதை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சுந்தர் சி, கொஞ்சம் மாற்றி குறையை கூறுகிறேன் என்று, என் வாழ்க்கையில் சவாலான ஒரு கதாபாத்திரம் சம்யுக்தா.
எத்தனையோ நட்சத்திரங்களுடன் பணியாற்றி இருக்கிறேன், ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல் ஒரு காட்சியில் நடிக்க வைக்க மிகப்பெரிய சவாலாக அமைந்தது என்று காமெடியாக கூறியிருந்தார் சுந்தர் சி.