விவாகரத்துக்கு பின்பும் மாறாத பாலா! வயற்று வலி சாக்கு சொல்லி கிளம்பிய சூர்யா?
பாலாவிற்கும் நடிகர் சூர்யாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது இதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவை காலையில் இருந்து மதியம் வரை கால்கடுக்க வெயிலில் ஓடவைத்துள்ளாராம் இயக்குனர் பாலா. இதனால், கடுப்பான நடிகர் சூர்யா தனக்கு வயிற்றுவலி என்று கூறிவிட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டாராம்.
இதன்பின் சூர்யாவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இயக்குனர் பாலா, இனி சூர்யா வரமாட்டார் என தெரிந்ததும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.
ஆனால், பல கஷ்டங்களை தாண்டி நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடித்து கொடுக்கும் சூர்யா, பாதி நாட்கள் விடாமல் ஓடவிட்டதால் இப்படி ஷூட்டிங்கை கேன்சல் செய்வாரா என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார். எதாவது பாலாவுக்கும் சூர்யாவுக்கு வாய் சண்டையாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியும் வருகிறார்கள்.