ரஜினிக்கு போட்டியாக ராஜ்கிரண் செய்த வேலை!! 110 கோடியால் நடிகர்களிடம் திட்டுவாங்கிய தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தற்போது வரை பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் டி. சிவா. அம்மா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், ராஜ்கிரண், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார். மாணிக்கம், அரவிந்தன் உள்ளிட்ட படங்களுக்கு பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார்.
அதன்பின் 2008க்கு பின் மீண்டும் தயாரிக்க முடிவெடுத்தார். சரோஜா, மரியாதை, அரவான், கடவுள் இருக்கான் குமாரு, பார்ட்டி, சார்ளி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்தார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் டி. சிவா, தயாரிப்பதை நிறுத்திவிட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரஜினி மற்றும் ராஜ் கிரண் குறித்த ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
மாணிக்கம் படத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் சம்பளமாக அப்பவே வாங்கினார் ராஜ் கிரண். 3 படம் அவரே தயாரித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடினார். அப்போது அவர் சம்பளம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.
எனக்கு படம் பண்ணுங்க என்று கேட்டதும், அப்போதைய காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1 கோடி சம்பளமாக வாங்கி வந்தார். அதனால் எனக்கு 110 கோடி சம்பளம் கொடு என்று கேட்டார்.
அப்படி சம்பளம் கொடுத்ததால் எல்லா நடிகர்களும் என்னை திட்டினார்கள். அத்தனை திட்டுக்கள் வாங்கித்தான் மாணிக்கம் படத்தினை தயாரித்து முடித்தேன். ஆனால் படம் ஓரளவிற்கு ஓடியதாக தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்துள்ளார்.