ஃபுல் போதையில் விபத்து ஏற்படுத்திய 5 பிரபலங்கள் அதுவும் இந்த நடிகரின் மகளா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மாடல் நடிகையாகவும் பிக்பாஸ் பிரபலமாகவும் திகழ்ந்து வரும் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் இரவு பார்ட்டி முடித்துவிட்டு வரும் வழியில் விபத்தாகி சம்பவ இடத்திலேயே தோழி மரணமடைந்தார். கடும்காயங்களுடன் அவரும் அவரது ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
யாஷிகா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் போலிசார்.யாஷிகா மட்டுமின்றி மேலும் பல பிரபலங்கள் இதுபோன்ற சாலை விபத்துக்களை ஏற்படுத்தி உள்ளனர். இதில் பிரபல இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி, நடிகர் ஜெய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா, நடிகர் அருண் விஜய் மற்றும் துருவ் விக்ரம் போன்ற பல பிரபலங்களும் சாலை விபத்துகளை ஏற்படுத்தியவர்.
இவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும் பிரபலங்களும் வசதி படைத்தவர்களின் வாரிசுகளாக மட்டும் உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.
குடிபோதையில் கார் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரமும் விபத்தில் உயிரிழந்தாள் அந்த குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் என்று கூறப்படுகிறது.