அடுத்தடுத்து மன உளைச்சலில் சிக்கும் விஷால் பட நடிகைகள்.. புலம்பித்தள்ளும் நடிகை தனுஸ்ரீ தத்தா..
சினிமாவில் மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல இடங்களில் பிரச்சனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் நடிகைகளுக்கு பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
நீது சந்திரா
அப்படி தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த நீது சந்திரா, தன்னை ஒரு தொழிலதிபர் மனைவியாக ஒரு மாதத்திற்கு 25 லட்ச சம்பளத்திற்காக பேரம் பேசினார் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் படவாய்ப்புக்காக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் என்று பேட்டியில் கூறியிருந்தார்.
தனுஸ்ரீ தத்தா
தற்போது வார் பேட்டியளித்த ஒரு வாரத்திற்கு பின் அதே பட நடிகை தனுஸ்ரீ தத்தா தான் உடல் அளவிலும் மன ரீதியிலும் கஷ்டப்படுகிறேன். யாராவது எதையாவது செய்யுங்கள் என்று குமுறி இன்ஸ்டாகிராம் பதிவினை போட்டுள்ளார். சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. என்னுடைய வேலைக்காரி குடிக்கும் நீரில் ஏதோ ஒன்றினை கலந்ததால் என் உடல்நிலை மோசமானது.
இரு முறை கார் விபத்து ஏற்பட்டு தப்பித்து மும்பை வந்தேன். இப்போ என் விட்டிற்கு வெளியே அருவருப்பான சம்பவங்களும் நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இதனால் நான் தற்கொலை எல்லாம் செய்து கொள்ள மாட்டேன். எங்கேயும் போகாமல் நடிப்பில் கவனம் செலுத்துவேன்.
பாலிவுட் மாஃபியாக்களும் அரசியல்வாதிகளும் சமுக விரோதிகள் சேர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். நான் மீடு வில் குற்றம் சாட்டியவர்கள்கள் தான் இதெற்கெல்லாம் காரணம் என்று விரிவாக கூறியுள்ளார். ஏற்கனஏ நடிகை தனுஸ்ரீ தத்தா, மீ டூ மூலம் நடிகர் நனா படேகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாரளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.