உச்சக்கட்ட பயத்தில் நடிகர் கீர்த்தி சுரேஷ்!! எல்லாம் அந்த வீடியோவால் தான்..
இந்திய சினிமாவில் சமீபகாலமாக உலாவரும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப்-ஃபேக் வீடியோ தான் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
அப்படி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மாடல் நடிகையின் கவர்ச்சியோடு எடிட் செய்து லீக் வீடியோ ஒன்று வைரலானது.
இதுகுறித்து ராஷ்மிகா கண்டித்து ஒரு பதிவினை போட்டார். மேலும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக நடிகர் அமிதாப் பச்சன், நாக சைதன்யா உள்ளிட்டவர்களும் கருத்துக்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷுன் அந்த வீடியோவை எதிர்த்து ஒரு பதிவினை சமீபத்தில் போட்டிருந்தார். டீப்-ஃபேக் வீடியோவால் எனக்கு பயமாக உள்ளது. அதை உருவாக்கிய நபர், அந்நேரத்தில் வேறு யாருக்காவது நல்லது செய்திருக்கலாம்.
இந்த தொழில்நுட்பத்தால் நமக்கு வரமா, சாபமா என்று புரியவில்லை. அன்பு, பாசிட்டிவ் மட்டுமே பரப்புவோம். மனிதர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விசயத்தால் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் பயந்து வருகிறார்கள்.