தங்கலான் பார்த்தா தொங்கலான்னு தோணும்!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்..
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி ஆகஸ்ட் 15ல் வெளியான படம் தங்கலான். இரு ஆண்டுகள் உழைப்பிற்கு பின் இப்படம் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுகுறித்து பல விமர்சகர்கள் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அந்தவகையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தங்கலான் படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை கூறியிருக்கிறார். அதில், வலியையும் வேதனையும்தான் படமாக சொல்லப்போகின்றார்கள் என்று போனால், பா ரஞ்சித் வேறுமாதிரி காட்டியிருக்கிறார். இந்த இரத்த சரித்திரத்தை படமாக எடுக்கிறேன் என்பதை விட்டுவிட்டு பா ரஞ்சித், நான் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதை காட்டுகிறேன் என்று எடுத்திருக்கிறார்.
கோலார் தங்கவயல் என்ற ரத்த சரித்திரத்தை படமாக எடுக்காமல், வருணாசிரமம், சிறுதெய்வ வழிபாடு, பெருமாள், ராமானுஜம், கிருஸ்துவ மதம், முஸ்லீம் மதத்தில் இருந்து திப்பு சுல்தான் ஆகியோரை இழுத்து வைத்துக் கொண்டு, தன்னுடைய ஜாதி மதம் குறித்த அரசியல் நிலைப்பாட்டை, நேரடியாக அழுத்தம் திருத்தமாக சொல்லாமல் வழக்கம் போல் சொல்லாமல் ஈயம் பூசி உருட்டி வைத்திருக்கிறார்.
கதையை சொதப்பி, விஷுவலில் பரதேசி, ஆயிரத்தில் ஒருவன் படங்களை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார். ஒரு படம் ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது, ஆனால் ஒரு படமே புரியவே இல்லை என்றால் அது யாருடைய தவறு. வசன் புரியல, கதையும் புரியல என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இது ப்ரீயட் படம் என்பதால் அதற்கான வேலையும் சரியாக செய்யவில்லை. குடியிருப்பு பகுதின்னு ஒன்றை காட்டிதில் அது செயற்கையாக இருக்கிறது.
காஸ்ட்டியூம் நன்றாக இல்லை. VFX வேலை சொல்லும் படியாகவும் இல்லை. ஆரம்பத்தில் படம் நன்றாக இருந்தது. ஆனால் போகப்போக படத்துடன் கனெக்ட் செய்து கொள்ளமுடியவில்ல. விக்ரம், பார்வதி, மாளவிகா நன்றாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு அருமை, ஜிவி பிரகாஷ் படத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார். சரியில்லாத கதையும் வலுவில்லாத திரைக்கதையும் படத்தை ஜவ்வு மிட்டாய் போல் மாற்றிவிட்டது.
படம் முடியும் போது பார்ட் 2 லீட் கொடுத்து முடிக்கிறார்கள், அது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. உண்மைக்கு நெருக்கமான படத்தை கொடுத்த பா ரஞ்சித், உண்மையான ரத்த சரித்திரம் குறித்து படம் எடுத்துள்ளார் என்று தங்கலான் படத்தை பார்த்தால் தொங்கலான்னு தோனிடும் என்று ப்ளூ சட்டை மாறம் விமர்சித்திருக்கிறார்.