ராயல்டி இசைஞானி மத்தியில் இப்படியொரு தியாகராஜன்!! புல்லரிக்க வைத்த நடிகர்..
ராயல்டி
தன் பாடல்களை மற்ற படங்களில் அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு கொடுத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.
சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தியதற்காக குட் பேட் அக்லி படத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார் இளையராஜா.
அதேபோல் கஸ்தூரி ராஜாவும் தன் அனுமதியில்லாமல் பாடல்களை ஆதிக் ரவிச்சந்திரன் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தினார்.
தியாகராஜன் - டூரிஸ்ட் ஃபேமிலி
இப்படியொரு சூழல் இருக்க, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரித்த மம்முட்டியான் பாடலை பயன்படுத்தி இருந்தனர்.
ராயல்டி பெறாமல் மம்பட்டியான்(Malaiyuru Nattamai) பாடலை பயன்படுத்தியது குறித்து தியாகராஜன் அளித்த பேட்டியில் சில விசயத்தை கூறியிருக்கிறார்.
அதில், மம்பட்டியான் பாடலை தன்னிடம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தினார்கள். பலரும் தன்னிடம் வந்து வழக்கு போடுங்கள், பணம் கேளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவுமே எனக்கு தோண்றவில்லை.
ஏனென்றால் அந்த பாடல் மீண்டும் நத பாடம் ஹிட்டானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, அதனால், நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
ராயல்டி விசயத்தில் பலர் இப்படியான நஷ்ட ஈடு கேட்டு வரும் நிலையில், தியாகராஜன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டவர்கள் இதுகுறித்து பேசியது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.