அந்த இடத்திற்கு தனிமையில் செல்ல இந்த தைரியம் தான்!! இலக்கியாவால் ஷாக்கான பிரபல நடிகை..
டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் தான் இலக்கியா. படுமோசமான அசைவுகளோடு ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு பிரபலமான இலக்கியா சமீபத்தில் தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்திருக்கிறார்.
துபாயில் டான்ஸராக இருக்கும் போது பார்ட்டி, கிளப் என்ரு நடனமாடிவிட்டு சென்னைக்கு வருவேன். அப்படி இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கிக்கொண்டிருப்பதாகவும், எனக்கு தேவையானதை நானே சமைத்து சாப்பிடும் அளவிற்கு இங்கு தனியாக வாழ்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட நடிகை ஷகீலா, வால்பாறையில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு துபாய்க்கு சென்று டான்ஸ் ஆடி சென்னை வரும் தைரியம் எங்கிருந்து வந்தது என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு இலக்கியா, நான் சிறு வயதில் இருந்தே தனியாக இருக்க பழகிக் கொண்டேன் என்றும் சின்ன வயதில் அம்மா இல்லை, அதனால் ஹாஸ்டலில் வளர்ந்து தனிமையில் இருந்ததால் இந்த தனிமை எனக்கு பழகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.