டாக்ஸிக் பட நெருக்கமான காட்சி சங்கடமாக உணர்ந்தேனா? நடிகை கியாரா அத்வானி ஓபன் டாக்..
கியாரா அத்வானி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் இந்தியில் வெளிவந்த எம்.எஸ். தோனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து டாக்சிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான கியாரா அத்வானி, தன்னுடைய கணவருடன் மாலத்தீவிற்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

நெருக்கமான காட்சி
இந்நிலையில் டாக்ஸிக் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்தபோது சங்கடங்களை உணர்ந்ததாகவும் வேறு வழியின்றி, தான் படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது என்றும் எனக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என்று கூறியதாக சோசியல் மீடியாக்களில் தகவல் பரவியது.
இதற்கு கியாரா அத்வானி மறுப்பு தெரிவித்து, முற்றிலும் முட்டாள்தனமானது இது என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.