சப்ப காரணங்களுக்காக சேர்ந்து வாழணுமா.. விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசிய திரிஷா..

Trisha Gossip Today Marriage Divorce Tamil Actress
By Edward Sep 12, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, லியோ படத்தினை தொடர்ந்து விஜய்யின் கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளது தான் தற்போது பெரிய டாப்பிக். இதனை தொடர்ந்து திரிஷா பல படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார்.

ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் செய்யாமல் நின்று போனதால் 40 வயதை எட்டியும் திரிஷா திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நடிகை திரிஷா திருமணம் குறித்தும் விவாகரத்து குறித்தும் பேசியது தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

சப்ப காரணங்களுக்காக சேர்ந்து வாழணுமா.. விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசிய திரிஷா.. | Trisha Spoke About Marriage Life And Divorce

திருமணம்

என்னிடம் பலர் மிகவும் சாதாரணமாக எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை. குறிப்பாக நான் யாருடன் என் எதிர்காலத்தை எடுத்துக்கொண்டு போகிறேன். அப்படியான ஒரு மனிதரை நான் எப்போது சந்திப்பேன் என்று தெரியது. அப்படி ஒருவரை பார்க்கும் போதுதான், என் மீதமுள்ள வாழ்க்கையை அவருடன் வாழப்போகிறேன் என எனக்கு தோன்றவேண்டும்.

விவாகரத்து

மேலும் எனக்கு விவாகரத்தில் நம்பிக்கையும் இல்லை, நாட்டமும் இல்லை. திருமண உறவில் இருந்து நான் விவாகரத்து வாங்கப்போவதில்லை. அதேசமயம், என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கான திருமணத் தம்பதிகள் அனைவரும் தவறான காரணங்களுக்காகவே இணைந்து வாழ்கிறார்கள். அந்த திருமண வாழ்வில் அவர்களால் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியவில்லை.

சப்ப காரணங்களுக்காக சேர்ந்து வாழணுமா.. விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசிய திரிஷா.. | Trisha Spoke About Marriage Life And Divorce

குழந்தைகள், பெரியவர்கள், குடும்பத்தினர் போன்ற தவறான காரணங்களாக இணைந்து வாழ்ந்து இருக்கும் என் நண்பர்கள் பலர் உள்ளனர்.

இதனால் எனக்கு திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை என்றும் நான் எனக்கு சரியானவரை சந்திக்கும்வரை காத்திருக்கத் தயார் என்றும் இது நடக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை.

அதாவது எனக்கு திருமணமே நடக்கவே இல்லை என்றாலும் பரவாடில்லை என்னால் அதை புரிந்து கொள்ளமுடியும். அதற்காக நான் ஏதோ விபரீதம் என நினைக்கவில்லை. அது இயல்பானது என நினைக்கிறேன் என்று திரிஷா கூறியிருக்கிறார்.