ஆண்களுக்கு தான் அந்த விசயத்தில் முக்கியத்துவம்.. அதனால் தான் அதில் இருந்து வெளியே வந்தேன்!! விஜே பாவனா..
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக பணியாற்றி சினிமாவில் ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்கள் பலர். அப்படி இந்தியா அளவில் பிரபலமானவர் தான் விஜே பாவனா. ஆரம்பத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜேவாக இருந்த போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை போன்று மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
அதன்பின் திடீரென சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும், கிரிக்கெட் ஆட்டங்களில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன், பிஸ்யாக வேலை செய்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறி சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு எபிசோட்டில் பங்கேற்றார்.
இந்நிலையில், எவ்வளவு தான் விஜய் டிவியில் பெஸ்ட் கொடுத்தாலும் ஆண்கள் தான் அதிகம் பேசப்பட்டு வந்தனர். பெண்களுக்கு அங்கு முக்கியம் தரவில்லை என்பதாலும் சில காரணங்களாலும் அங்கிருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார் விஜே பாவனா.
தனிப்பட்ட விசயத்தில் சிலர் என்னிடம், ஏன் இன்னும் குழந்தை பெறுக்கொள்ளவில்லை என்று கேட்கிறார்கல். ஆனால் அப்படி கேட்பதால் எனக்கு சற்ற்ம் வலியை கொடுத்ததில்லை, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட இவர்கள் யார் என்று கேட்கத் தோன்றும் என்றும் அதுபற்றி கேட்டால் கடுப்பாகிவிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.