வாழ்த்து மட்டுமில்லை எனக்கு வச்சு செய்யவும் தெரியும், அரசாங்கத்தை அதிர வைத்த விஜய்
தமிழ்நாட்டில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தான். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சராயம் அருந்தி தற்போது ஜூன் 20 காலை 9 மணி நிலவரப்படி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் பல அரசியல் கட்சிகள் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டும் நேரில் சென்றும் வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். எப்பவும் மற்ற விஷயங்களுக்கு வாழ்த்துக்கள் ஆறுதல்கள் மட்டும் கூறி வந்த விஜய் தற்போது முதன்முறை, அரசை எதிர்த்து ஒரு கருத்தினை பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
— TVK Vijay (@tvkvijayhq) June 20, 2024