நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச? இலங்கை குறித்து கவிஞர் வைரமுத்து ஆவேசபதிவு..
கொரோனா காலகட்டத்தில் பல நாடுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடிவாங்கி அன்றாடா வாழ்வாதாரத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அதில் இலங்கை மிகப்பெரிய பேரழிவை சந்தித்தது.
சாதாரண பொருட்களின் விலைக்கூட அதிக விலைக்கு விற்பனை செய்யும் அளவிற்கு பொருளாதார புரட்சி ஏற்பட்டது. இதனால் இலங்கை அரசிக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜானாதிபதி கோட்டாபய ராஜ பக்சாவை எதிர்த்து இலங்கை மக்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
தற்போது ஜனாதிபதி, பிரதமர் ராஜினாமா செய்த நிலையில், அரசுக்கு ஆதரவாக இருந்த ராஜபக்ச ஆதாரவாளர்களுக்கும் எதிராக போராடியவர்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது.
இதனால் இலங்கை பற்றி எரிய மகிந்த ராஜபக்ச வீடும் எடுக்கப்பட்டது. தன் மனைவிகளை பாதுகாப்பாக எலிக்காப்டரில் அனுப்பி வைத்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச எங்கே என்ற ஒரு இணைய தள பதினை போட்டுள்ளார்.
தயாகம் பிரியேன் தாய் மண்ணில் மரிப்பேன்ற பிரபாகரத்தமிழனின் பேராண்மை எங்கே, நாடு கடக்கத்துடிக்கும் ராஜ பக்ச எங்கே என்று கூறியுள்ளார். இதற்கு இணையத்தில் பல்வேறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
நான்கு பக்கம்
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2022
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு#SriLanka