இயக்குநர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்கவேண்டும்!! வானதி சீனிவாசன் கண்டனம்...
இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், மெல்லத்திறந்தது கதவு, திருமதி பழனிசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுந்தர்ராஜன், கோவை குண்டிவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.

சுந்தர்ராஜன்
அவர் பேசுகையில், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவி செத்துப் போயிட்டார்கள் என்பார்கள். அப்பாவியாக இருப்பதை காட்டிலும் செத்துப் போயிடு என்று சொல்கிறேன்.
யாருங்க அப்பாவி, நீங்க பஸ்ல உக்காரப்போங்க, ப்ரதர் இது என் சீட்டுனு சொல்லி தினத்தந்தி பேப்பரையோ, தினகரன் பேப்பரையோ போட்டு வச்சுட்டு என் சீட்டுனு சொல்லுவான். செருப்பை வச்சுட்டு போவாங்க, கைக்குட்டை வச்சுட்டுப் போவாங்க, இது என் சீட்டுனு சொல்வாங்க, அவன் ஏமாளியா? என்று பேசியிருக்கிறார்.

இதுகுஈர்த்து பலரும் கண்டனம் செலுத்தி வந்த நிலையில், பாஜகவின் முன்னாள் எம் எல் ஏ வும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாந்தி சீனிவாசன் தன்னுடைய கண்டனத்தை கூறியிருக்கிறார். கொச்சைப்படுத்தி பேசிய அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 31, 2026
1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை… pic.twitter.com/3eG7rXAQFA