அந்த நடிகருடன் ரகசிய காதலில் குடும்பம் நடத்துறேனா!! உண்மையை உடைத்த சின்னத்திரை நயன்தாரா..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியல் வாய்ப்பு பெற்று நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் என்ற சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வாணி போஜன் வெள்ளித்திரை வாய்ப்புகளை தட்டி சென்றார். இதன்மூலம் சின்னத்திரை நயன் தாரா என்ற பெயரையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றார் வாணி போஜன்.

10க்கும் மேற்பட்ட படங்கள்
அதிகாரம் 79 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஓமை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். சியான் விக்ரமுடன் மகான் படத்தில் நடித்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து டெலீட் செய்ததால் கடுமையான சோகத்தில் இருந்தார் வாணி போஜன்.
இதனை அடுத்து, 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் வாணி போஜன் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மிரள் என்ற படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்துவரும் வாணி போஜன், ஜெய்யுடன் கிசுகிசுக்கப்பட்ட ரூமர் செய்திக்கு பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார்.

காதல் கிசுகிசு
ஒரு ரூமர் செய்தியால் எதற்கு சிரித்திருக்கிறீர்கள் என்று வாணி போகன் கூறியுள்ளார். இதுதான் சரியான நேரம், பல இயக்குனர்கள் என்னிடம் கால் செய்து கேட்டார்கள். என் கதையை ஒரு நடிகர் கேட்கிறார், லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். ஒன்றாக வாழ்ந்து இயக்குனர்கள் கதை கூறும் போது அவர் இருக்கிறார் என்றெல்லாம் ரூமர் வந்தது.
என் கதையை நான் தான் கேட்கிறேன், எந்த நடிகரும் கேட்கவில்லை. அட்வைஸ் பண்றதுன்னு சொல்லிட்டு இந்த ஹீரோ தான் கதை கேட்கிறார், லிவ்விங்கில் இருக்கிறார் என்று கூறுவது எல்லாமே பொய். நான் அவங்களுக்கு சொல்றேன், ஒருவரின் கேரியரை கெடுக்காதீங்க என்று பதிலடி கொடுத்திருக்கிறார் வாணி போஜன்.