ரம்யா கிருஷ்ணனை செட்டில் இப்படி பேசினார்! நகுல் நடந்ததை கூறியதற்கு வனிதா பதிலடி..

vanitha television nakul ramyakrishnan bbjodigal
By Edward Aug 05, 2021 03:13 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிதான். அதில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் சில வாரங்களுக்கு முன் அம்மன் வேடமிட்டு சுரேஷ் சக்ரவர்த்தியுடன் நடனமாடினார். சில இடங்களில் வனிதாவின் நடனம் சங்கடத்தை ஏற்படுத்தியது என்றும், நீங்கள் நன்றாக ஆடி இருக்கலாம் என்று நடுவர்களான நகுல் ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளனர்.

இதையடுத்து பிபி நிகழ்ச்சி குழு தன்னை அசிங்கப்படுத்தியும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டனர் என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விளக்கம் கொடுத்தார். இதையடுத்து ரம்யா கிருஷ்ணனிடன் வாக்குவாததில் ஈடுபட்டதற்கு தற்போது நகுல் என்ன நடந்தது என்று கூறியுள்ளார். வனிதா அவர்களை இருவரும் நடனத்தை பற்றிய கருத்துக்களை நல்ல முறையில் தான் எடுத்து கூறினோம்.

ஆனால் வனிதா எங்களிடம் ஒப்பிட்டு பேசக்கூடாது என்று வாக்குவாதம் செய்தார். இதனால் ரம்யா கிருஷ்ணனும் அவரது கருத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து செட்டில் இருந்து வெளியேறி அம்மன் வேஷம் போட்டப்படியே எங்கல்லை பற்றி அசிங்கமான வார்த்தையில் பேசியுள்ளார் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

மேலும் என்னை எப்படியாவது பேசினதை விடுங்கள். ரம்யா கிருஷ்ணன் எப்படியொரு பெரிய நடிகை அவரிடம் இப்படி நடந்து கொண்டது வருத்தம் ரம்யா கிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகர் நகுல். இந்நிலையில் இதையறிந்த நடிகை வனிதா நகுலுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளாராம்.

பிரச்சனையை சம்மந்தப்பட்டவர்கள் நாங்கள் இருவரும் அமைதியாக இருக்கும்போது வேறு ஒருவர் இதைப் பற்றி பேச தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் நான் படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். கண்டவர்களின் உளறலை கேட்க தயாராக இல்லை என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.