சர்ச்சைகளுக்கிடையில் இப்படியொரு சோகமான நாள்! பிக்பாஸ் வனிதா விஜயகுமாரின் பதிவு..
தமிழ் சினிமாவில் விஜய்யின் சந்திரலேகா, மாணிக்கம் போன்ற படங்கள் நடிகர் விஜய்குமார் மஞ்சுளாவின் வாரிசு நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார். இதையடுத்து இரு திருமணம் இரு காதல் தோல்வி என சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் குடும்பத்தை பிரிந்து தன் இருமகளுடன் தனிமையில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நிகழ்ச்சியில் இருந்து விலகி காரணத்தை கூறி பதிவிட்டு வந்தார். இதையடுத்து 4 ஆம் முறை திருமணம் நடக்கும் என்ற ஜோதிடரின் கருத்தை தொடர்ந்து பவர்ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அவரது அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை நினைத்து ஜூலை 23ல் பதிவு ஒன்றினை போட்டுள்ளார். அதில், உங்களால் முடிந்ததை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள், கொடுக்கத் தெரிந்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றின் மூலமும் என்னுடன் இருக்க முடிந்த அனைத்தையும் செய்தீர்கள்.
மிஸ் பண்றேன் நான் ஒவ்வொரு நொடியும் உங்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் என் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் என்னுடன் இருந்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன் என்று பதிவிட்டுள்ளார்.
You have given the best you could and knew to give..you are still doing everything possible to be with me thru everything..I miss you every second of the day..I wish you could have been there with me in the best phase of my life..but I know you are there with me always https://t.co/age5J7fJle
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 22, 2021