நான் 2-ஆம் தாரமா!! இரண்டாம் கல்யாணத்தை விமர்சித்தவருக்கு சரத்குமார் மகள் வரலட்சுமி பதிலடி..
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. படத்தில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்திவிடுவார். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வரலட்சுமியும் நிக்கேலாய் நீண்ட நாள் நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது, நிக்கேலாய் குறித்து பல விஷயங்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், தொழில் அதிபரான நிக்கேலாய் பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறார்.
ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இந்த ஜோடி விவாகரத்து செய்துவிட்டனர். அவரின் மகள் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான 43 வயதானவரை 2 ஆம் திருமணம் செய்வது ஏன் என்ற கேள்விகள் எழுந்து வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார் வரலட்சுமி.
அதில், மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்பவும் கவலைப்படமாட்டேன் என்றும் இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் உங்களுக்காக வாழுங்கள். நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் பயணிக்க மாட்டார்கள் எனவும் நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு துணையாக நிற்கப்போகிறீர்கள்.
அதனால் என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யுங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
You May Like This Video
