இருக்கு ஆனா இல்லை! சிம்புவின் மாநாடு-2 வில் இந்த வில்லனா?
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி வாகையை சூடி கம்பேக் படத்தை கொடுத்து கொடிக்கடி பேசப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிறப்பான பங்கையாற்றி கொடுத்துள்ளார் சிம்பு.
அவருக்கு அடுத்தப்படியாக பேசப்பட்டு வருபவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா தான். டைம்லூப் கதையை மையப்படுத்தி பிசுரு சிந்தாமல் சிறப்பாக இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. இப்படத்தின் வசூல் சாதனையை அடுத்து மாநாடு 2 எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கிளைமேக்ஸிலும் டைம்லூப் காட்சி வருவதுபோல் எடுத்துள்ளோ. அதற்கு காரணம் மாநாடு 2விற்காக. அப்படி சிம்புவுக்கு டைம்லூப் வரும் பட்சத்தில் இறந்து போன தனுஷ் கோடி கதாபாத்திரம் உயிர் பெரும். அப்படியானால் மாநாடு 2 வில் எஸ்ஜே சூர்யா மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார் வெங்கட் பிரபு.