கன்னத்தில் அறைந்த எஸ் ஏ சந்திரசேகர்!! கோபத்தில் அப்பாவையே தட்டிக்கேட்ட விஜய்.. காரணம் இதான்..

Vijay Gossip Today S. A. Chandrasekhar
By Edward Jun 18, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் எட்டமுடியாத இடத்தினை பிடிக்க காரணமாக இருந்தது அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தான். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தன் மகன் விஜய்யை நடிகனாக அறிமுகம் செய்து அடுத்தடுத்த படத்தினை இயக்கினார்.

கன்னத்தில் அறைந்த எஸ் ஏ சந்திரசேகர்!! கோபத்தில் அப்பாவையே தட்டிக்கேட்ட விஜய்.. காரணம் இதான்.. | Vijay Argue With His Father Sa Chandrasekar

ஆரம்பத்தில் அவர் இயக்கிய படங்கள் விஜய்க்கு தோல்வியை கொடுத்தாலும் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்து வெற்றியை கண்டார். அதன்பின் கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடித்து உச்ச நட்சத்திரமாக மாறினார். விஜய்யின் ஆரம்பகால படங்களில் அவரின் 5 நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள்.

அப்படி விஜய்யுடன் தாமு, வையாபுரி, சாப்ளின் பாலு, விவேக், மயில்சாமி போன்றவர்கள் அதிக படங்களில் இடம்பெறுவார்கள். அவர்களில் முக்கியமானவர் நடிகர் சாப்ளின் பாலு. மாண்புமிகு மாணவன் படத்தின் சூட்டிங்கில் உதவி இயக்குனர் ஒருவர் செய்த தவறுக்காக சாப்ளின் பாலிவை கன்னத்தில் எஸ் ஏ சந்திரசேகர் அறைந்துவிட்டார்.

கன்னத்தில் அறைந்த எஸ் ஏ சந்திரசேகர்!! கோபத்தில் அப்பாவையே தட்டிக்கேட்ட விஜய்.. காரணம் இதான்.. | Vijay Argue With His Father Sa Chandrasekar

உடனே அதை பார்த்த விஜய் கோபப்பட்டு அப்பாவிடமே சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருக்கிறார். தன் நண்பர்களுக்காக விஜய் அப்பாவிடமே சண்டை போட்டார் என்று சாப்ளின் பாலு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.