41 பேர் உயிரிழப்பு.. 34 மணி நேரம் கழித்து வெளியே வந்த விஜய்.. பரபரப்பு போட்டோ!
விஜய்
அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, கடைசியாக கரூரில் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது தொடர்பாக பல சினிமா மற்றும் அரசியல் வாதிகள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பரபரப்பு போட்டோ!
இந்நிலையில், சனிக்கிழமை இரவு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு விஜய் வந்தடைந்தார். அதன்பின் பல பிரச்சனைகள் எழுந்த நிலையில், தற்போது 34 மணி நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
பாதுகாவலர்களுடன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து தனது பட்டினப்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார்.