விஜய் பப்ளிக்காக குடிப்பாரா? ஓட்டலிலேயே அவர் அப்படித்தான்!! பிரபலம் சொன்ன சீக்ரெட்..
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவரே காரை ஓட்டி சென்றார். அந்த சமயத்தில் அவர் சீட்டுகு அருகே காருக்குள் ஒரு கிளாஸ் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. அந்த கிளாஸில் இருந்தது மது தான் என்றும் சிலர் கூறி வந்தனர்.

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் வி.கே. சுந்தர் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
சரக்கு போட்டுகிட்டே
அதில், இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் முதல்வர் விஜய் பத்தி ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் மூகாம்பிகை கோயிலுக்கு போயிட்டு வரும்போது முதல்வர் விஜய், அவரது காரை ஓட்டி வந்தார்.
எனக்கு தெரிந்து இப்படி எந்த மாநில முதல்வரும் செல்ஃப் டிரைவிங்கில் ரோட் ஷோ போனதில்லை என்று நினைக்கிறேன், அதை முதல்முறையாக உடைத்து, விஜய் ஒரு லாங் டிரைவ் ஓட்டிட்டு வந்தது சோசியல் மீடியா முழுக்க செம்ம வைரல், உடனே ஒரு போட்டோ ஷாப் குரூப், விஜய் காரை ஓட்டும்போது சரக்கு போட்டுகிட்டே ஓட்டினார் என்று ஒரு போட்டோ போடுகிறார்கள்.

விஜய் கார் ஓட்டுகிறார், கார் கண்ணாடி வழியாக முன்புறம் கான்வாய் போகிறது, காரில் இருக்கும் ஹேண்ட் பிரேக் இருக்கிற இடத்தின் பக்கத்தில் ஒரு யூஸ் அண்ட் த்ரோ கிளாசில் சரக்கு இருக்கிற மாதிரி போட்டோ ஷாப் பண்ணிப்போட்டு புலங்காகிதம் அடைகிறார்கள். போட்டோ ஷாப் பார்ட்டிகளுக்கு இரண்டு விஷயம் புரியவில்லை, ஹை எண்ட் கார்களில் கப் ஹோல்டர், பாட்டில் ஹோல்ட எங்கிருக்கும் என்பதும் தெரியவில்லை.
ட்ரிங்க்ஸ் அடிக்கர பழக்கம் இல்லை” என்று சொன்னார் விஜய். “சுந்தர், நம்ம ஆளுதான் சாப்பிடுங்க” என்று இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் விஜய் அந்த பியரைத் தொடவே இல்லை! என்று நீண்ட ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் வி.கே. சுந்தர்.