அரசியல் ஆசையால் ஒட்டுமொத்த மார்க்கெட்டுக்கே ஆப்பு வைத்து கொண்ட விஜய்!! கோட்-க்கு வந்த சோதனை..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (TheGreatestOfAllTime )படத்தில் நடித்து வருகிறார். பிஸியாக படப்பிடிப்பினை முடித்து வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கான வேலைகளையும் பார்த்து வருகிறார். கோட் படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு பின் கமிட்டாகிய படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளேன் என்று விஜய் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்ப விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குனர் எச் வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்நிலையில் அரசியலால் விஜய்யின் மார்க்கெட் சரிந்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
லியோ விற்பனை
கோட் படம் வெளியாகும் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் முழு வியாபாரம் முடிந்துவிட்டதாம். ஆனால் லியோ படத்தைவிட மார்க்கெட் பல கோடி கோட் படத்திற்கு குறைந்துள்ளது. அதாவது, லியோ படத்திற்காக தொலைக்காட்சி உரிமை சுமார் 90 கோடிக்கும் ஆன்லைன் உரிமை சுமார் 120 கோடிக்கும் விற்கப்பட்டது. அதேபோல் லியோ படத்தின் எஃப் எம் எஸ் எனும் வெளிநாட்டு உரிமையை சுமார் 60 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.
இப்படி பல கோடி விற்பனையை அள்ளிய லியோ படத்தினை தொடர்ந்து கோட் படத்தின் மார்க்கெட் அதைவிட கூடுதல் விலைக்கு விற்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைத்திருந்தது. ஆனால் நிறுவனம் நினைத்தபடி நடக்கவில்லையாம்.
கோட் வியாபாரம்
கோட் படத்திற்காக தொலைக்காட்சி உரிமை மற்றும் ஆன்லைன் உரிமை சுமார் 30 கோடி குறைவாக விற்பனையாகி இருக்கிறதாம். அதிலும் வெளிநாட்டு உரிமை சுமார் 15 கோடி குறைவாக விற்பனையாகி இருக்கிறது. இதனால் லியோ படத்தின் பிசினஸ்0-ஐ விட கோட் படத்திற்கு சுமார் 45 கோடி குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று தயாரிப்பு நிறுவனம் குழப்பத்தில் இருக்கிறார்களாம். அதிலும் விஜய்யின் சம்பள தொகையைவிட பிசினஸ் பல கோடி குறைவாக வியாபாரம் ஆகி இருப்பது படக்குழுவினரையும் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
You May Like This Video