திரிஷாவை முதல்வரின் தந்தை கண்டுக்கொள்ளவில்லையா!! மாறனுக்கு டீகோடிங் காட்டிய ரசிகர்கள்..
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை உட்பட பல இடங்களில் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் சுதந்திர தின விழா வாழ்த்தை தெரிவித்து வந்தனர்.
[YTWWFவ்]
சென்னை கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றிய நிலையில், அந்த நிகழ்வில் திரிஷா பங்கேற்றது தான் ஒட்டுமொத்த மீடியா, சோசியல் மீடியாகளில் ஃபோகஸாக இருந்தது.
ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிஷாவை விஜய் அப்பா மதிக்கவே இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
வணக்கம் வைத்த நடிகை. கண்டுகொள்ளாத எஸ்.ஏ.சந்திரசேகர்.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 15, 2026
pic.twitter.com/cAz7Avs6i9
இதற்கு நெட்டிசன்கள், அந்த நிகழ்வின்போது முதலமைச்சர் விஜய்யின் அம்மா பச்சை நிற பட்டுச் சேலை அணிந்து, விஜய்யின் தந்தை வெள்ளைநிற ஆடையணிந்து நடுவிலும், திரிஷா ஆரஞ்சு நிற சேலையில் முதல் ஆளாக திரிஷா அமர்ந்தும் இருந்தனர்.

அவர்கள் மூவரையும் பார்க்கும் போது மூவர்ணக் கொடியை காட்டும் விதமாக மேட்சிங்கான உடை வரிசையில் உட்கார்ந்திருந்தனர். அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? என்று டீகோடிங் செய்து ப்ளூ சட்டை மாறனை வெளுத்துள்ளனர்.
Insta full ah ithan trending.......... pic.twitter.com/AE7QLiCoB8
— Joe Selva (@joe_selva1) August 15, 2026