விவாகரத்து விவகாரத்தில் பேச்சுவார்த்தையில் விஜய்!! மனம் மாறினாரா சங்கீதா..
விவாகரத்து
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தன்னுடைய கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குறிப்பக நடிகையுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது.
நடிகையுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு கேட்டும் அவர் கேட்காததால், எங்கள் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டு 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டு என்னுடைய கணவரிடன் வருமானத்தை கருத்தில் கொண்டு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா.

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசுபொருளானதை அடுத்து, சில நாட்களிலேயே விஜய், நடிகை திரிஷாவுடன் ஒரே நிற ஆடையணிந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், வரும் 20 ஆம் தேதி விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
மனம் மாறினாரா சங்கீதா
இப்படியிருக்கையில் சங்கீதா ஏப்ரல் 20 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பல விளக்கங்களையும் ஆதாரங்களையும் வெளியிடலாம் என்று கூறப்பட்டது. தற்போது, சங்கீதா 20 ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து சங்கீதா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன்பின் சங்கீதா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் செய்தியாளர் சந்திப்பை தவித்ததாக கூறப்படுகிறது.