திருமணத்திற்கு தடையாய் இருந்த ஊடகம்.. கேப்டன் நடிகரை உருகிஉருகி காதலித்த நடிகை! REWIND
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று பேசப்பட்டு தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் வேட்டியும் கைலியுமாக இருந்த விஜயகாந்த், போகபோக பேண்ட் டிரெளசர் என மாற்றி ரசிகர்களை ஈர்த்தார்.
அதன்பின், கிராமத்து ஆளாக இருந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் மன்னராக மாற்றியது ராதிகாதான் என அப்போதே செய்திகள் வெளிவந்தது. ஒருகட்டத்தில், விஜயகாந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் நடக்க இருந்த நேரத்தில் பத்திரிகைக்காரர்கள் செய்த குழப்பத்தால் திருமணம் தடைபட்டதாம்.
இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த் கிடைக்காத விரக்தியில் ராதிகா தற்கொலை முயற்சி செய்ததாகவும் நடிகர் பயில்வான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து ராதிகா நடிகர் சரத்குமாரின் வாழ்க்கைக்கு சென்று அவரையும் சர்ச்சையில் இருந்து மீட்டு தன் பக்கம் கொண்டுவந்து நல்ல மனிதராக மாற்றியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.