காசு இருக்கானு கேட்டா, மனைவிகிட்ட தான் வாங்குவான்!! ஜெயம் ரவி பற்றிய ரகசியம் உடைத்த சியான் விக்ரம்..
விக்ரம் - ஜெயம் ரவி
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த விஷயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பாடகி ஒருவர் தான் என்று கூறப்பட்டு அவரும் அதற்கான விளக்கத்தை அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இவ்விவகாரம் குறித்து பலர் விமர்சித்தபடி கருத்துக்களை கூறி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெளிநாட்டு ஷூட்டிங்கின் போது விக்ரம் ஜெயம் ரவி பற்றி கூறிய சில கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் எப்போது பர்ஸ் கையில் வைத்திருக்க மாட்டேன். தேவைப்படும்போது என் அசிஸ்டன்ட் இடம் தான் வாங்கிப்பேன்.
காசி இல்லாத சமயம்
நானும் ஜெயம் ரவியும் வெளிநாடுகளில், எப்போதாவது பார்ட்டிக்கு போனால், ஏதாவது பணம் தேவைப்பட்டால் ஜெயம் ரவியிடம், மச்சான் பைசா இருக்கா என்று கேட்பேன்.
அப்போது என்கிட்ட இல்ல அண்ணா என்று ஜெயம் ரவி சொல்லிவிட்டு பின் தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து வாங்கி கொடுப்பார் என்று விருது விழா ஒன்றில் விக்ரம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.