பையன் இருக்கும் போதே இரண்டாம் கல்யாணம் பண்ண இதான் காரணம்.. நடிகர் விஷ்ணு விஷால் கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லால் சலாம் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் விஷ்ணு விஷால் தன்னுடைய அலுவலகத்தை பற்றியும் இரண்டாம் மனைவி ஜுவாலாவை பற்றியும் பகிர்ந்துள்ளார். என் வாழ்க்கையில் இரண்டு கல்யாணம் பண்ணுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை, அது நடந்து. மனைவி ஜுவாலா முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பார்த்து எனக்கு மிகவும் சிறந்த புகைப்படம் இது.
விவாகரத்துக்கு பின் என் வாழ்க்கையில் இன்னொரு கல்யாணம் பண்ணுவேன் என்று நினைக்கவில்லை என்றும் அதனால் தான் உண்மையாக சொல்கிறேன். அவ்வளவு இனிமேல் நான் தனியாக தான் வாழப்போகிறேன் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் ஜுவாலாவை அதன்பின் பார்த்தேன், அவள் ரொம்பவும் பாசிட்டிவ். எனக்கு விருப்பம் இல்லை, எண்ணமும் இல்லை.
ஏன் என்கூட பழகுற, உன்னை திருமணம் செய்வேனா என்று எனக்கு தெரியாது. எனக்கு பையன் இருக்கிறேன், அவனை பார்க்கும் போது வேற மாதிரி தோணுது வேண்டாம் என்று தான் சொன்னேன். அதை மீறியும் உங்களை பிடித்திருக்கிறது என்று கூறினார். அதன்பின், நான் என்னோட வலிக்கும் என் பிரச்சனைக்கும் ஏன் இன்னொருவரின் வாழ்க்கையை கெடுக்கனும்.
அவளுக்கு குழந்தைன்னா பிடிக்கும், குழந்தை பெத்துக்கனும்னு ஆசை, கல்யாணம் பண்ணனும் ஆசை, ஏனென்றால் அவங்களுக்கும் 10 வருஷத்துக்கு முன்விவாகரத்தாகி இருந்தது. அதை பற்றி யோசித்தேன், என் பையன் ஆரியனை தவிர யாரும் எனக்கு குழந்தை இருக்க கூடாது என்று நினைத்தேன்.
ஜுவாலாவின் அருமையை நினைத்து சரி நம் மனதை உடைத்து, என்னை பற்றியை பற்றி யோசிக்காமல் மறுமணத்தை பற்றி யோசித்து ஜுவாலாவை கல்யாணம் செய்தேன் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் விஷ்ணு விஷால்.