இறந்து 3 நாளாச்சு!! அழுகிய நிலையில் ஆடையின்றி கிடந்த நடிகை சபர்ணாவின் கண்ணீர் கதை..
நடிகை சபர்ணா
சினிமாவில் நாம் பார்த்து வியந்து ரசித்த நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள். அப்படி நம்மை மகிழ்வித்த நடிகை சபர்ணா தன்னுடைய 29வது வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். ஏன் அப்படி செய்தார் என்ற அவரின் கண்ணீர் கதை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சபர்ணா கோவை அரசு கல்லூரியில் BSc சைக்காலஜி படித்துக்கொண்டு இருக்கும் போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
அதற்காக தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்பு தேடி சென்னை வந்தார். சென்னை வந்தவர் பல கம்பெனியில் ஏறி இறங்கியப்பின் சபர்ணாவிற்கு சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சீரியல் டூ படங்கள்
அதன்பின் சபர்ணாவிற்கு சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, பின் பாசமலர், சொந்த பந்தம், புது கவிதை, தென்றல், மாயமோகினி போன்ற சீரியல்களில் நடித்தார். அதேபோல் ஜெயா டிவி, ராஜ் டிவிகளின் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய சபர்ணா, விஷால் நடித்த பூஜை படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாகவும், மிகாமன் படத்தில் ஹன்சிகாவின் தோழியாகவும் நடித்தார். இரு படங்களிலும் அவர் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. வளர்ந்து வரும் நடிகையாக இருந்த சபர்ணா, திடீரென தன்னுடைய இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
சென்னை ஆலப்பாக்கத்திலுள்ள ஒரு குடியிருப்பில் சபர்ணா தனியாக வசித்து வந்தார். 3 நாட்களுக்கு மேலாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது. அதோடுமட்டுமின்றி, அந்த கதவின் அருகில் செல்லும் போதெல்லாம் துர்நாற்றம் வீசியதால், சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், வீட்டின் கதவை தொட்டதுமே கதவு திறந்து கொண்டதாம். வீட்டிற்குள் கை மணிக்கட்டு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில், உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக இருந்துள்ளார் சபர்ணா.

முக்கிய காரணம்
பிரேத பரிசோதனைக்காக அவர் உடல் அனுப்பி வைக்கப்பட்டத்தில், அவர் இறந்து 3 நாட்களுக்கும் மேலாகிவிட்டது, நிர்வாண நிலையில் இறந்து கிடந்தாலும் கதவு தாழிடப்படாமல் இருந்தாலும் இது மர்ம மரணம் என்று கருதி போலிசார் விசாரணை நடத்தினர்.
நடந்த விசாரணையில் இது தற்கொலை என்று தெரியவந்தது. அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் படவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

வாய்ப்பு இல்லாததால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். சாப்பாட்டிற்கு வழியில்லாததால் வெறும் டீயை மட்டும் குடித்துக்கொண்டு காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறார் சபர்ணா.
அவரின் விடு முழுக்க டீ கப்புகள் இருந்துள்ளது. கஷ்டப்பட்டு முட்டிமோதி சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தவர் இன்றும் சற்று போராடி இருந்தால் நிச்சயம் ஜெயித்திருப்பார். ஆனால் தவறான முடிவால் 30 வயது தொடங்காத நிலையில் வாழ்க்கையை முடித்துக்கொண்டது சினிமாத்துறையில் பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது.