திசைமாறும் விஜே சித்ரா தற்கொலை!! பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் அந்த காட்சியை தோண்டி எடுக்கும் நடிகை?

Serials V. J. Chitra
By Edward May 21, 2022 02:09 PM GMT
Edward

Edward

Report

சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியவிலும் தென்னிந்தியாவில் இப்படியான தற்கொலை நடந்து கொண்டு வருகிறது. அப்படி 2020 டிசம்பர் 9 ஆம் தேதி காலை சின்னத்திரை சீரியல் நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட சில மாதங்களில் விஜே சித்ரா ஓட்டலில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரின் தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஹேமந்த் புகார்:-

மர்மங்கள் நிறைந்த இந்த விவகாரம் நடந்து ஒன்றரை ஆண்டுகளாகிய நிலையில் ஜாமினில் வெளிவந்த ஹேமந்த் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் சிலரால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது என்று புகாரளித்தார். புகாரில் தன் மனைவி சித்ராவின் தற்கொலையில் என்மீது சாக்கடயை ஊற்றியுள்ளனர். எப்படியாவது இதை பொய் என்று நிரூபிக்க தகுந்த நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்று கூறியும், என்னை சில அரசியல்வாதிகளும் நக்சலைட்டுகளும் மிரட்டுவதாக கூறி புகாரளித்தார்.

சித்ரா பெற்றோர்கள் புகார்:-

இதற்கு விஜே சித்ராவின் பெற்றோர்கள் வறுத்தப்பட்டு ஹேமந்த் தான் என் மகளை அடித்து கொலை செய்து இப்படியாக மாற்றி இருக்கிறான். அவள் உடலில் சில காயங்களும் உள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும் அரசியல் சவகாசம் என் மகளுக்கு கிடையாது. அது ஹேமந்திற்கு தான் இருக்கிறது என தெரிவித்திருந்தார்கள்.

நடிகை ரேகா நாயர் விளக்கம்:-

இவர்களை தொடர்ந்து விஜே சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். சமீபத்தில் திருமணமான சித்ராவுக்கு ஹேமந்திற்கு ஏன் காண்டம். ரூமில் அவ்வளவு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சித்ரா மது அருந்துவால், ஹேமந்திற்கு போதை பழக்கமும் அரசியல் பின்புலமும் இருக்கிறது என்றும் கூறி வந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மேலும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் ரேகா நாயர்.

நானும் சித்ராவும் சைக்காலஜி படித்தோம். ஆனால் ஒரே கல்லூரியில் கிடையாது. நடிகைகளாக இருக்கும் போது தான் தோழிகளாகினோம் என்று கூறியுள்ளார். நான் பலமுறை அவளிடம் கூறி அறிவுரை கூறி வந்தேன். அவளை பற்றி இப்படி நான் பேசுவது எனக்கு எந்த ஆதாயமும் இல்லை.

நான் ஏன் பொய் சொல்லவேண்டும் உண்மையை கூறக்கூடாது. நான் பொய் கூறவில்லை, உண்மையை கூறாமல் இருக்க போவதும் கிடையாது. அவர்களின் அம்மா புலம்புவதற்கு தான். தன் மகளை பற்றி அவர்கள் அம்மா கூட கவலைப்படவில்லை.

சித்ராவின் தவறு:-

எல்லாம் அவர்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் சித்ராவின் தற்கொலைக்கு அவளே தான் காரணம். அவளின் பேராசை தான் காரணம். ஹேமந்த் சித்ரா தற்கொலைக்கு அந்த ரூமில் இருக்கும் ஒரு தீக்குச்சி தான். தன் மனைவியை விற்பது கணவன் கிடையாது. சித்ராவை கல்யாணம் பண்ணணும் என்கிற எண்ணமில்லை. அதிக காதல் காரணமாக இங்கு ஆடக்கூடாது நடிக்கக்கூடாது என்று கூறியுள்ளான்.

அதுதான் அன்று இரவு ஹேமந்த் நடந்து கொண்டான். இறப்பதற்கு முன் சீரியலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் நடந்துள்ளது. அப்போது ஏன் சித்ரா சாகவில்லை. சித்ரா பேகில் கஞ்சா, தீப்பெட்டி இருந்ததை போலிஸார் சொன்னார்கள். இந்த சர்ச்சைகளுக்காக எல்லாம் சித்ரா தற்கொலை செய்திருக்க மாட்டால்.

எதிர்த்து பேசும் பொண்ணு தற்கொலை செய்து கொள்வாலா என்பது என்னால் நம்ப முடியாது என தெரிவித்துள்ளார். இது தற்கொலை கிடையாது தற்கொலை தான் என்று அடித்து கூறியுள்ளார் ரேகா நாயர். தற்போது இந்த விஷயம் அதிகளவில் சூடுபிடித்துள்ளது.