பாதியில் அப்பா இறந்ததுக்கு, அவர்மேல் தான் கோபப்பட்டு இருக்கேன்!! விஜே பிரியங்காவின் மறுப்பக்கம்..

Bigg Boss Priyanka Deshpande Star Vijay
By Edward Jan 17, 2024 05:31 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. தன்னுடைய தனித்துவமான காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் குணம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீஷியன் பணியாற்றிய பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

பாதியில் அப்பா இறந்ததுக்கு, அவர்மேல் தான் கோபப்பட்டு இருக்கேன்!! விஜே பிரியங்காவின் மறுப்பக்கம்.. | Vj Priyanka Emotional About Her Father Died Angry

தானா சேர்ந்த கூட்டம்

திருமணத்திற்கு பிறகு கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பிரியங்கா தன் வேலையை பார்த்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளை தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

பிரபல யூடியூப் சேனலில் அவரது 15 ஆண்டுகளாக தொகுப்பாளினி பயணத்தை வைத்து தானா சேர்ந்த கூட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரியங்காவின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில், அவரது அம்மா, தம்பி, உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், ரசிகர்கள் பலர் பிரியங்காவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். என் தம்பி என்னை பாராட்டி சீராட்டி எல்லாம் புகழ்ந்தது கிடையாது. என் தம்பி மனைவி பாராட்டுவாள் என்று தெரிவித்துள்ளார்.

பாதியில் அப்பா இறந்ததுக்கு, அவர்மேல் தான் கோபப்பட்டு இருக்கேன்!! விஜே பிரியங்காவின் மறுப்பக்கம்.. | Vj Priyanka Emotional About Her Father Died Angry

கடவுள் மீது கோபம்

எல்லா மேடையில் அப்பாவை மிஸ் பண்ணி இருக்கிறேன். அவர் அதை எப்படி ரியாக் செய்வார் என்றும் என்ன சொல்லி இருப்பார் என்றும் பெருமைப்படுவாரா என்றும் அப்பா கேட்பாரா என்று யோசித்தது உண்டு. அதை எப்படியாவது பேலன்ஸ் பண்ண முடியும் என்று நினைப்போம். ஆனால் அப்பா புகைப்படம் வந்துவிடும். அதை என் அம்மா மூலம் எங்களை பாதுகாத்து பார்த்துக்கொண்டார்.

பாதியில் விட்டுவிட்டு போனதால் அப்பா மேல் கோபப்பட்டதில்லை. ஆனால் கடவுள் மீது கோபப்பட்டு இருக்கிறேன். எங்களுக்கு ஏன் இப்படி நடக்கனும், எங்களுக்கு ஏன் இது நடக்கனும் என்று நிறைய கேள்வி கேட்டு இருக்கிறேன். என் முன்னால் அப்பா வந்து என்னிடம் ஏதாவது கேட்டால், போகாதீங்க, இங்கேயே இருங்க என்று கூறி கண்ணீர் விட்டு இருக்கிறார் விஜே பிரியங்கா.