காசு கொடுத்து தான் அர்ச்சனா டைட்டில் வாங்குனரா!! புலம்பும் பிக்பாஸ் மாயா..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 106 நாட்களாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கடந்த ஞாயிற்று கிழமை, கமல் ஹாசன் இறுதி நாளை நிறைவு செய்திருந்தார்.
அர்ச்சனா டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டு 50 லட்சம் தொகை உள்ளிட்ட பல பரிசுகளை தட்டிச் சென்றார். இரண்டாம் இடம் மணியும், 3 ஆம் இடம் மாயாவும் பிடித்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து வெற்றிப்பெற்றவர்கள் கொண்டாடி வரும் நிலையில் 3 ஆம் இடத்தை பிடித்த மாயா ஒரு பதிவினை போட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு ரசிகை, உண்மையான பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் மாயா தான், மக்கள் சாம்பியன் என்று கூறியிருந்தார்.
அந்த பதிவை மாயா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோப்பை மணி கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால் காசு கொடுத்து மக்கள் அன்பை வாங்க முடியாது, என்று கூறியிருக்கிறார். இதனை நெட்டிசன்கள் மாயாவை கேலி செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

