VJ சித்ரா பக்கத்தில் சென்றாலே கஞ்சா வாடை தான் வரும்!! ரகசியத்தை உடைத்த பத்திரிக்கையாளர்..
சின்னத்திரையில் விஜே-வாக பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உயரத்திற்கு சென்ற விஜே சித்ரா ஹேமந்த் என்பவரை திருமணம் செய்த சில மாதங்களில் ஓட்டலில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேமந்த் தான் என்று அவரை கைது செய்தனர் போலிசார். இந்த சம்பவம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் தனக்கு ஆபத்து என்று அரசியல் பிரமுகர் உட்பட சிலர் மீது புகார் அளித்திருந்தார் ஹேமந்த்.
இதுகுறித்து விசாரணை சென்றுள்ள நிலையில், சித்ரா, ஹேமந்த் தங்கிருந்த அறையில் காண்டம், கஞ்சா போன்றவைகள் எப்போது இருக்கும் என்று நடிகை ரேகா நாயர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் ஆண் நண்பர்களுடன் சவகாசமும் அவரது தற்கொலை அவரது பேராசை தான் காரணம். சித்ராவை கொலை செய்துவிட்டு ஹேமந்த் இப்படியான நாடகத்தை செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார் ரேகா.
இந்நிலையில் விஜே சித்ரா பக்கத்தில் சென்றாலே கஞ்சா வாடைதான் வரும் என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சினிமா நட்சத்திரங்களில் அந்தரங்க செய்திகளை பகிர்ந்து வரும் பயில்வான் விஜே சித்ராவை பற்றி இப்படி கூறியது அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
சின்னப்பாப்பா பெரியப்பாப்பா சீரியல் சமயத்தில் விஜே சித்ராவுடன் இருந்திருக்கிறேன். இருவருக்கும் சண்டையில் தான் அறிமுகமாகினோம். சித்ராவுக்கு பாய் பிரண்ட்ஸ் அதிகம். கஞ்சா, மது பழக்கம் உள்ளவர். இறப்பதற்கு முன் பிறந்த நாளின் போது குழந்தைகளுக்கு உதவியும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.