நடிகை டாப்ஸிக்கு விரைவில் டும் டும் டும்... மாப்பிள்ளை யார்
நடிகை டாப்ஸி
தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். இதனை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் கமிட்டாகியும் வருகிறார்.
சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வரும் டாப்ஸி, தற்போது சிக்ஸ்பேக் காட்டியபடி எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் தன்னுடைய நீண்டகால நண்பரும், முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
உதய்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறதாம்.