16 வயது மார்பக புற்றுநோய்!! மீண்டு வந்த உலக அழகி ஓபல் சுசாட்டாவின் மறுப்பக்கம்..
ஓபல் சுச்சாட்டா
ஆண்டுதோறும் உலக அழகி போட்டி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் 2025 அழகி போட்டி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் சமீபத்தில் நடந்துள்ளது.
இந்தியாவில் அழகி போட்டி நடப்பது இது 3-வது முறை. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்ட நிலையில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு ரூ. 8.5 கோடி பரிசுத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
16 வயது மார்பக புற்றுநோய்
இந்நிலையில் உலக அழகி ஓபல் சுசாட்டா, தன்னுடைய சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல், தாய், சைனீஸ், ஆங்கிலம் என 3 மொழிகளை பேசக்கூடியவர். 16 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிகப்பட்ட ஓபல், தொடக்க நிலையை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டார்.
அதன்பின் மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிபுணர்வு பிரச்சாரத்தையும் செய்து வந்துள்ளார். உலக அழகி பட்டத்தை வெல்வதற்கான பயணத்தை 2021ல் துவங்கிய ஓபல் சுசாட்டா, மிஸ் ரட்டனகோசின் பட்டத்தை வென்றும் 2022ல் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று 3வது இடத்தையும் பெற்றார்.
ஆனால் 3வது இடம் பிடித்த நொகோலின் ராஜினாமா செய்வதாக அறிவித்ததால் ஓபல் 2வது இடத்திற்கு முன்னேறினார். 2024ல் முதல் உலக அழகி போட்டிக்கான பயணத்தை தொடங்கி அடுத்த ஆண்டே மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்றிருக்கிறார் உலக அழகி ஓபல் சுசாட்டா.