என்னை விட்டுட்டு வேறொரு கல்யாணம் பண்ணதே அவர்தான்!! பதிலடி கொடுத்த பவன் கல்யாணின் முன்னாள் மனைவி..
ரீல் ஜோடிகளாக நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்களில் ஒரு ஜோடி தான் பவன் கல்யாண் - ரேணு தேசாய். பத்ரி படத்தில் ஒன்றாக நடித்து வந்த இருவருக்கும் காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகன் பிறந்துள்ளது. திருமணத்திற்கு பின் ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தத இரு ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் தன் இரு மகள்களை வளர்ந்து அவர்களின் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், 2 அல்லது 3 ஆண்டுகளில் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள், கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள். அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் கண்டிப்பாக 2. 3 ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வேன், எனக்கு திருமண வாழ்க்கை வேண்டும், எல்லா தாம்பத்திய வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவதாகவும் நடிகை ரேணு தேசாய். பவன் கல்யாண் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர். இதற்கிடையில் பவன் கல்யாணை பிரிந்தது பற்றி ரேனு தேசாயை அவரது ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
ரேணு தேசாய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவன் கல்யாண் ரசிகர் ஒருவர், நீங்கள் இன்னும் சற்று பொறுமையுடன் இருந்திருக்கலாம் அண்ணி. கடவுள் போன்ற ஒருவரை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அநேகமாக நீங்கள் அவரது மதிப்பை இப்போது உணர்ந்திருப்பீர்கள், ஆனால் குழந்தைகள் அவருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று கூறி கிண்டல் செய்தவாறு கருத்தினை பகிர்ந்துள்ளார்.
இதற்கு ரேணு, ஒரு துளி அறிவு உங்களுக்கு இருந்தால், இப்படியொரு முட்டாள் தனமான கருத்தை கூறியிருக்க மாட்டீர்கள். என்னை விட்டு சென்று மறுமணம் செய்ததே அவர் தான், நானில்லை. தயவுசெய்து இதுபோன்ற கருத்துக்களை தவிர்க்கவும், அவை என்னை மட்டுமே அசிங்கப்படுத்துகிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய்.
You May Like This Video