மகனுக்கு திருநெல்வேலி பெண்ணை மருமகளாக்க இதான் காரணம்!! பளீச் பதில் கொடுத்த நெப்போலியன்..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சினிமா துறையில் கலக்கிய இவர் அரசியலிலும் இறங்கி தன்னுடைய அடையாளத்தை முத்திரை பதித்தார். நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கிறார். அவருடைய சிகிச்சைக்கு இந்தியாவில் சரியான வசதி இல்லாத காரணத்தால் அமெரிக்கவில் சிகிச்சை அளித்து வந்தார். கடைசியில் மகனுக்காக அமெரிக்காவில் சென்ற அவர், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இந்தச் சூழலில் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடிக்கவுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் பெண் எடுத்த காரணத்தை நெப்போலியன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதில் நான் கடல் கடந்து போனாலும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மறக்காதவன். என் மகனையும் தமிழ் கலாச்சரத்தோடு வளர்த்துள்ளேன்.
எந்த தேசத்தில் நான் இருந்தாலும் என் குடும்பத்தில் என் மருமகள் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு காசு, பணம் எல்லாம் முக்கியம் கிடையாது என் மருமகள் என் அடுத்த வாரிசு. அதனால் தான் தமிழ்நாட்டு பெண்ணை என் மருமகளாக மாற்றி இருக்கிறேன் என்று நெப்போலியன் தெரிவித்துள்ளார்.