யாஷிகா ஆனந்த் விபத்தாகி இறந்த தோழி இவர்தானாம்! வைரலாகும் புகைப்படம்..

biggboss yashikaanand yashikaanandcaraccident
By Edward Jul 26, 2021 10:53 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. சில தினங்களுக்கு முன் தோழியை நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததை அடுத்து பார்ட்டி கொடுக்க மகாபலிபுரம் சென்றுள்ளார். சென்ற இடத்தில் பார்ட்டியை முடித்துவிட்டு காரில் தன் ஆண் நண்பர்கள் உள்ளிட்டவர்களுடன் தோழியுடன் திரும்பியுள்ளார்.

அப்போது குடித்துவிட்டு ஓட்டியதில் கார் விபத்துக்குள்ளாகி தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த ஆண் நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலிசார். காரில் இருந்தவர்கள் யாரும் சீட்பெல்ட் போடவில்லை. அதனால் தான் உயிர்சேதமும் காயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இடுப்பு, முதுகு, கை, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சிகிச்சைப் பிறகு சுய நினைவுக்கு வந்த யாஷிகாவிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். நான் மது அருந்தி காரை ஓட்டவில்லை என்று விசாரணையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், இறந்த தோழியின் பெயர் வள்ளிச்செட்டி பவானி என்றும் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன் ஜினியர் என்றும் அமெரிக்காவில் இருந்து 2 தினங்களுக்கு முன் தான் இந்தியா வந்து நண்பர்களை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. என் மகளின் மரணத்தால் மிகுந்த வருத்ததில் இருப்பதாகவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் வள்ளிச்செட்டி பவானியின் தந்தை கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery