கெட்டவார்த்தையில் திட்டிய நெட்டிசன்கள்! புகைப்படத்தை வெளியிட்டு வருந்திய நடிகை யாஷிகா ஆனந்த்..
நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் இரவு பார்ட்டிக்காக அவரது தோழி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று வீடு திருமியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே தோழி பவானி மரணமடைந்துள்ளார். யாஷிகா மற்றும் ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கால், கை, முதுகில் அடிப்பட்டு மூன்று அறுவை சிகிச்சை செய்து தற்போது தேறிவந்துள்ளார். தோழி இழந்ததை சில தினங்கள் மறைத்து பின் கூறியுள்ளனர் அவரது குடும்பத்தார். அதிர்ச்சியான செய்தியை கூறக்கூடாது என்ற காரணத்தால் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் தோழியின் மரணம் குறித்து கேள்விப்பட்ட யாஷிகா உருக்கத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவு ஒன்றியை இட்டுள்ளார். அதில், தற்போதைய நிலைமையை வெளிப்படுத்த இயலவில்லை.
என்றும் எப்போதும் குற்ற உணர்வு நீங்காது. இந்த, கோர விபத்தில் இருந்து என் உயிரை காத்த கடவுளுக்கு நன்றி செல்வதா? அல்லது என் சிறந்த தோழியை பறித்ததற்காக வாழ்நாள் முழுவதும் பழிப்பதா?” என கூறியுள்ளார். மேலும், “பவானி என்னை மன்னிக்க மாட்டாள். பவானியின் குடும்பத்தை இத்தகைய கடின சூழலுக்கு தள்ளியதற்கு மன்னிப்பு கூறுகிறேன். பவானியின் குடும்பம் ஒருநாள் என்னை மன்னிக்கும். எப்பொழுதும் பவானியின் நினைவுடன் வாடுவேன்.
மேலும், தான் இப்படி செய்ததை கடுமையாக அதுவும் பேசக்கூடாத வார்த்தையை கொண்டு தாக்கி பேசியுள்ளனர். இதை பார்த்து அவர்கள் கூறியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஸ்டோரியில் போட்டு பகிர்ந்துள்ளார்.