காசுக்காக அப்படி பேசினார்கள்.. பெரிய ஹீரோ சொன்ன வார்த்தை!! நடிகர் யோகி பாபு..
யோகி பாபு - போட்
காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு, சமீபத்தில் போட் என்ற படம் வெளியாகியிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வந்தார்.
ஒரு பேட்டியொன்றில், தன்னை பற்றி தேவையில்லாத ஒரு செய்தியை பகிர்ந்து என்னை மாட்டிவிட்டார்கள் சிலர் என்று பேசியிருக்கிறார். நான்று நாட்கள் நடிக்க வைத்துவிட்டு பிரமோஷனில் என் பேனரை போட்டு இவர் தான் லீட் ஆக்டர் என்று கூறி விடுகிறார்கள். சிலபேர் என்னை கெடுக்கவும் பார்த்தார்கள், அப்படி யார் எல்லாம் நடந்து கொண்டார்களோ, பின் எனக்கு கால்செய்து சாரி கேட்டார்கள்.
விமர்சகர்களின் அட்ராசிட்டி
சமீபத்தில், என்னை பற்றி தேவையில்லாததை பேசுவர்கள் பற்றி யோசிப்பதில்லை. அப்படி ஒருமுறை, அப்படி ஆகிவிட்டது என்று ஒரு விமர்சகர்கள் பேசினார்கள். அவர்கள் பிரபலமானவர்கள் என்பதால் சொல்வது எல்லாம் உண்மை என்று மக்கள் இன்று நம்புகிறார்கள். ஆனால், மக்கள் அவர்களை தற்போது டுபாகூர் என்று நம்புகிறார்கள். என்னை பற்றி பேசியபோது நான் கால் செய்து பேசினேன். எனக்கும் அந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை, இப்படி பேசுகிறீர்கள் என்றேன்.
அதற்கு அவர்கள், அது இல்லை வேறு, இதை மறைத்து பேசினோம் என்றனர். அதெல்லாம் தப்பு, என்ன பிரச்சனைக்கு பேசுகிறீர்கள் என்பதை கூறுங்கள். எந்த கம்பெனி கூறினார்கள் என்பது சொல்லுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றேன். உடனே நான் சொன்னால் பிரச்சனையாகிவிடும் என்கிறார்கள். அந்த படத்தின் இயக்குனரையே நான் தான் அறிமுகம் செய்தேன்.
நான் 50 லட்ச ரூபாய் குறைத்து நடித்து வருகிறேன்னு சொன்னாங்க. அவனுக்கு கால் செய்து கேட்டால், அப்படியெல்லாம் சொல்லவில்லை என்றான். ஒரு பெரிய ஹீரோ என் பக்கத்தில் இருக்கும் போது திரும்பவும் அவர்களுக்கு கால் செய்தேன். அந்த பெரிய ஹீரோ பெயரை சொல்லமாட்டேன்.
நடக்காததை, ஒரு வருமானம் வருவதற்காக இப்படி சொல்லலாமா, யாரையும் குறை சொல்லாதீங்க, தப்பா பேசாதீங்கன்னு நான் சொன்னேன்.
அதற்கு அவர்கள் ஒன்னு சொன்னாங்க, நீங்கள் என்னை கவனிக்கவே மாட்டுகுகிறீர்கள் என்று பணம் கேட்டார்கள். பின் அவர்களிடம் பேசாதீர்கள் போனை கட் பண்ணுங்கள் என்று அந்த பெரிய ஹீரோ அட்வைஸ் செய்தார் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.