முன்னணி இயக்குனரிடம் அகராதியாக பேசிய மாஸ்டர் மகேந்திரன், கோபத்தில் செய்தது
Tamil Actors
By Tony
மாஸ்டர் மகேந்திரன் இவரை பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து இருப்போம். அதோடு மாஸ்டர் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராகவும் அவர் வளர்ந்துவிட்டார்.
அதிலிருந்து மீண்டும் அவரை மாஸ்டர் மகேந்திரன் என்றே அழைக்கப்பட்டார்.
இவர் சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்ததால் எல்லாம் அவருக்கு சினிமாவில் தெரிந்தது தான்.
அதற்காக குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே, ஷாட் எத்தனை வைப்பீர்கள் என்று கேட்டால் இயக்குனருக்கு கோபம் வருமா, வராதா..ஆமாங்க, சூர்ய வம்சம் படத்தில் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க மாஸ்டர் மகேந்திரனை அனுகியுள்ளனர்.
அப்போது அவர் எனக்கு எத்தனை ஷாட், எங்கு வைப்பீர்கள் என கேட்க, விக்ரமன் கோபத்தில் அவனை கூப்பிட்டு போங்க என்று சொல்லியதாக நடிகர் பாவா லட்சுமணன் கூறியுள்ளார்.