வேற எதையும் எதிர் பார்க்காம வாய்ப்பு வந்தா ஓகே!! லிவிங்ஸ்டன் மகள் ஜோவிகா ஓப்பன் டாக்..
லிவிங்ஸ்டன் மகள்
பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகினார் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. அந்த தொடருக்கு பின் அருவி சீரியல் நடித்திருந்தார்.
சமிபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஜோவிதா, அருவி சீரியலில் தனிப்பட்ட விஷயத்தில் நிறைய கத்துக்கிட்டேன். கேமரா முன்னாடி நிற்பது புது உலகம் என்றும் அங்க நிறைய பேருடன் பழகுற வாய்ப்பு கிடைத்தது போல், பர்சனல் அட்டாக்ஸ் நிறைய நடந்துருக்கு என்றும் தெரிவித்துள்ளார். அதெல்லாம் கடந்து இன்று ரொம்பவே மெச்சூரிட்டியாகி இருக்கிறேன்.
மேலும், சினிமாவில் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு, எனக்கு என்று வர்ற வாய்ப்பு வரும், அப்பா சினிமாவில் மட்டும்தான் நடித்திருக்கிறார். பலர் என்னிடம் நீங்க ஏன் சீரியலில் நடிக்கிறீங்க என்று கேட்பார்கள்.
சரியான டைம் வரும், சினி ஃபீல்ட் பொறுத்தவரைக்கும் சில டைரக்டர்ஸ், புரொடியூசர்ஸ் திறமையை மட்டும் வைத்து வேறு ஏதும் எதிர்ப்பார்க்காமல் இருந்தா, இங்க திறமையுள்ள பலர் மேலே வரமுடியும்.
எல்லா டைரக்டர்ஸ், புரொடியூசர்ஸும் நான் சொல்லவில்லை. சிலர் என்னிடம் வேற எதையும் எதிர்ப்பார்க்காமல் என் திறமையை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுத்தால் நான் கண்டிப்பாக சினிமாத்துறைக்குள் வருவேன்.
எனக்கு ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசை, அதுவும் நான் நடிச்ச ஹீரோயினாகத்தான் நடிப்பேன்னு நான் சொல்லவில்லை நல்ல கேரக்டர் கிடைத்தாலே போதும்.
சினிமாவில் டிக்டாக் மூலமா வர்றவர்களுக்கு எவ்ளோ வாய்ப்பும் மரியாதையும் இருக்கு. சீரியலில் இருந்து வருபவர்களை சீரியல் ஆக்டர்னு சொல்றாங்க, அது என்ன சீரியல் ஆக்டர்? சீரியலும் படம் மாதிரிதான்.
அப்பாவுக்கு பிடிக்கவில்லை
சீரியல் நடிக்க அப்பாவுக்கு பிடிக்கவில்லை, என் விருப்பதை மீறி அவர் எதுவும் பண்ணமாட்டார். அவர் பட்ட கஷ்டத்தால் தான் என்க்கு வேண்டாம்னு சொன்னார். இவ்வளவு கஷ்டம் இங்கு இருக்குமான்னு உள்ளே வந்த பின் தான் தெரிந்தது.
நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்காங்க, மரியாதைக்குறைவா ட்ரீட் பண்ணியிருக்காங்க, அவங்க எல்லோருக்கும் நன்றி, அவங்களால தான் நான் கான்பிடண்ட் ஆக மேலே ஏறிட்டு இருக்கேன் என்று ஜோவிகா லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.