என்னை கமல் அப்படி பண்ணுவாரு நினைத்து கூட பாக்கல.. உண்மையை உடைத்த நடிகை கிரண்
கடந்த 2002 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண்.
இதையடுத்து இவர் வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கிரண், கமல் உடன் அன்பே சிவன் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அன்பே சிவம் படத்தில் நடித்த போது, நான் அதிகம் மேக்கப் போட்டுக்கொண்டு போய் நின்றேன். அப்போது அங்கே வந்த கமல் ஹாசன், இப்படி எல்லாம் இருக்கவே கூடாது. இவ்வளவு மேக்கப் எல்லாம் போடக்கூடாது.
இந்த படத்துக்கு இது செட் ஆகாது என கூறி டிஸ்யூ பேப்பரை எடுத்து முகத்தை சுத்தமாக துடைத்து விட்டார். கமல் ஹாசன் இப்படி பண்ணுவாரு நினைக்கவே இல்லை என்று கிரண் தெரிவித்துள்ளார்.
You May Like This Video