பணத்திற்காக வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்த நடிகைகள்!! 41 வயது நபரை கரம் பிடித்த காதல் சந்தியா..
திரைப் பிரபலங்கள் வழக்கத்திற்கு மாறாக சமீபகாலமாக வயது வித்தியாசம் அதிகம் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. அப்படி தன்னைவிட வசதியானவர்களுடன் அதிலும் பல ஆண்டுகள் மூத்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்தவகையில் வித்தியாசம் பார்க்காமல் பணத்திற்காக திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் என்று பார்ப்போம்..'
நேரம், ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியா தன்னுடைய சிறு வயதில் முன்னணி நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்தார். தன் 21 வயதில் 34 வயதிருக்கும் நடிகரை திருமணம் செய்தது பணத்திற்காக நஸ்ரியா இப்படி செய்தார் என்று விமர்சிக்கப்பட்டது.
நடிகை ரீமாசென், 42 வயதிருக்கும் தொழிலதிபர் தீப் கரணை திருமணம் செய்தார். ரீமே சென்-ஐ விட 9 வயது அதிக வித்தியாசம் கொண்டவர் அவரது கணவர். அவரின் திருமணமும் பணத்திற்காக நடந்ததாக விமர்சிக்கபட்டது.
காதல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சந்தியா 27 வயது இருக்கும் போது ஐடி நிறுவனம் நடத்தி வந்த 41 வயது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கிட்டத்தட்ட 14 வயது வித்தியாசம் என்பதால் அவரின் திருமணமும் பணத்திற்காக நடந்தது என்று கூறப்பட்டது.
குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒருசில படங்களில் நடித்து வந்த நடிகை மோனிகா 27 வயதில் 50 வயது நபரை திருமணம் செய்து கொண்டார். 2015ல் இவர்களின் திருமணம் நடைபெற்றப்பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார் மோனிகா. பணத்திற்காக 50 வயது நபரை திருமணம் செய்ததாக பேசப்பட்டது.
சீரியல் நடிகை நீலிமா ராணி தன்னைவிட அதிக வயதுடைய நபரை திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்தார். பணத்திற்காக தான் திருமணம் செய்தார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகை மகாலட்சுமி, ஃபேட் மேன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கோண்டார். வயது இருவருக்கு பெரியளவில் வித்தியாசம் இல்லை என்றாலும் குண்டானவரை பணத்திற்காக திருமணம் செய்துவிட்டாரே என்று மகாலட்சுமி மீது விமர்சனம் எழுந்தது.